twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரயில் டாய்லெட்டுக்குள் சிக்கித் தவித்த நடிகை குல் பனாக்

    By Staff
    |

    Gul Panag
    டார் இந்திப் படித்தில் நடித்து புகழ் பெற்ற குல் பனாக், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சண்டிகருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது டாய்லெடுக்குள் அவர் போயுள்ளார். ஆனால் கதவு சரியாக மூடாமல் இருந்துள்ளது. இதையடுத்து அழுத்தமாக கதவை மூடியுள்ளார். இதில் கதவு இறுக்கமாக மூடிக் கொண்டு விட்டது.

    மீண்டும் கதவைத் திறக்க முயன்றபோது கதவு திறக்கவில்லை. இதனால் பீதியடைந்தார் குல் பனாக்.

    கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் போராடி அந்தக் கதவைத் திறந்தாராம் குல் பனாக். துருப் பிடித்துப் போயிருந்ததால் கதவு இறுக்கமாக மூடிக் கொண்டதை பிறகு உணர்ந்தாராம் குல் பனாக்.

    இதுகுறித்து ட்விட்டர் மூலம் அவர் அனுப்பியுள்ள செய்தியில், சதாப்தி ரயிலில் டாய்லெட்டுக்குள் சிக்கிக் கொண்டு விட்டேன். மிகவும் கவலையாகி விட்டது. இருப்பினும் போராடி திறந்து வந்து விட்டேன்.

    டாய்லெட்டுக்குள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் சிக்கியிருந்தேன். கேட்பவர்களுக்கு இது வேடிக்கையாக இருக்கும். ஆனால் எனக்கு பெரும் கவலையாகி விட்டது என்று கூறியுள்ளார் பனாக்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X