Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விரும்பும் ஜோதிர்மயி!
நடித்து முடித்து களைத்த பின்னர்தான் பெரும்பாலான நடிகைகள் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாவார்கள். மாளவிகா போல செட்டிலான பின்னரும், செட்டுக்கு வந்தவர்களும் உண்டு.
ஆனால் ஜோதிர்மயி தலைகீழானவர். 2004ம் ஆண்டு இவருக்கு கல்யாணமானது. கணவர் பெயர் நிஷாந்த். சாப்ட்வேர் என்ஜீனியர். ஜோதிர்மயி, தமிழுக்கு வந்தபோது திருமதி ஜோதிர்மயி.
ஆனால் கல்யாணமான மேட்டரையே, ரொம்ப காலத்திற்கு கமுக்கமாக வைத்திருந்தார் ஜோதிர்மயி. ஆனால் அவர் கல்யாணமானவர் என்று தெரிய வந்ததால் பல பட வாய்ப்புகள் அவரிடமிருந்து விலகி ஓடின.
அப்படி இருந்தும் ஒருசில படங்களில் நடித்து வந்தார் ஜோதிர்மயி. பெரியார் படம் அவரது நடிப்புக்கு நல்ல சாட்சியாக அமைந்தது.
இந்த நிலையில்தற்போது கன்னடத்திற்கு போயுள்ளார் ஜோதிர்மயி. சிவராஜ் குமாருடன் அவர் இணைந்து நடித்துள்ள பந்து பாலகா என்ற படம் சமீபத்தில் ரிலீஸானது.
இந்தப் படம் குறித்து அவர்கூறுகையில், பந்து பாலகா படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். தொடர்ந்தும் கவர்ச்சியாகத்தான் நடிப்பேன். அதில் எந்தத் தவறும் இல்லை.
கல்யாணமானவர்கள் கவர்ச்சி காட்டக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. கவர்ச்சியாக நடிப்பது எனக்குப் பிடித்துள்ளது. தொடர்ந்து அப்படியே நடிப்பேன்.
கன்னடத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனவே தற்போதைக்கு தொடர்ந்து கன்னடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
அதேசமயம் தமிழ் சினிமாக்காரர்களை சாதாரணமாக கூறி விட முடியாது. எனக்கு பேராதரவு கொடுத்தது தமிழ் சினிமாதான். முதல் படமான தலைநகரம், பின்னர் நான் அவனில்லை, பிறகு பெரியார் என தொடர்ந்து எனக்கு ஹிட் படங்களாக அமைந்தது அதிர்ஷ்டம்தான். எனவே தமிழை மறக்க மாட்டேன் என்கிறார் ஜோதிர்மயி.