குருவாயூர் கோயிலில் குழநதைக்கு சோறூட்டி துலாபாரம் கொடுத்த நடிகை மீனா!
தனது 5 மாத குழந்தைக்கு குருவாயூர் கோயிலில் சோறூட்டி, எடைக்கு எடை வெண்ணை துலாபாரம் கொடுத்தார் நடிகை மீனா.
நடிகை மீனாவுக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டுள்ளனர். இப்போது 5 மாதம் ஆகிறது. மலையாளிகள் வழக்கப்படி (மீனாவின் தந்தை துரைராஜ் ஒரு தமிழர். அவரது அம்மா ராஜ் மல்லிகா மலையாளி) குழந்தை நைனிகாவுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நடந்தது.
இதற்காக கணவர் மற்றும் குழந்தையுடன் சனிக்கிழமை இரவு மீனா குருவாயூர் சென்றார். ஹோட்டலில் தங்கிய பிறகு, குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
பின்னர் கணவர் வித்யாசாகர் மடியில் நைனிகாவை உட்கார வைத்து சோறூட்டினார். குழந்தை எடைக்கு எடை வெண்ணை துலாபாரமும் செய்தார்.
Comments


Click it and Unblock the Notifications