Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழில் வாய்ப்பு கொடுங்க! - காவ்யா
பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன். தமிழில் காசி, சாது மிரண்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் விஷால் சந்திரா என்பவருக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.
தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'சைனாடவுன்' ஆகிய மலையாளப் படங்களிலும் 'தம்பித் துரை' என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
தனது மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில், "கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம் அதிகம். அதுபோன்ற படங்களில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும்.
எல்லா நடிகைகளுமே இதுமாதிரி படங்களில் நடிக்கத்தான் ஆர்வமாக உள்ளனர். சினிமாவை விட்டு 6 மாதங்கள்தான் விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நிறைய கதாநாயகிகள் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே விரும்புகின்றனர். காரணம் இங்குதான் நிறைய வித்தியாசமான முயற்சிகள் நடக்கின்றன.
மலையாளத்தில் நடித்தாலும் நானும் தமிழ் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறேன். எனக்கும் தமிழில் நடிப்பது வசதியாக உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் ரொம்ப அன்பானவர்கள்," என்றார்.
பின்னே, கோயில் கட்டி அழகு பார்க்கும் ரசிகர்களாச்சே!