Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விழாவுக்கு வர மறுத்ததால் மீரா ஜாஸ்மின், நயன்தாரா மீது 'அம்மா' கோபம்!
மலையாள நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள விழாவுக்கு வர மறுத்ததால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் அம்மாநில நடிகர் சங்கமான அம்மா-வின் நிர்வாகிகள்.
மலையாள நடிகர் சங்கத்தினர் கோழிக்கோட்டில் நாளை பிரமாண்ட கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பங்கேற்குமாறு அனைத்து நடிகர், நடிகைகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மம்முட்டி, மோகன்லால் உள்பட முன்னணி நடிகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஆனால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நயன்தாரா-பிரபுதேவா திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. எனவே தனியாக இந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாரா விரும்பவில்லையாம். ஹைதராபாத்தில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மீராஜாஸ்மினும் விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம். இதற்கு முன் நடந்த நடிகர் சங்க கூட்டங்களிலும் மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மீரா ஜாஸ்மின் மீது இந்த சங்கம் நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இப்போது கோழிக்கோடு விழாவுக்கு வர மறுத்ததால் இருவர் மீதும் நடிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.