Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விழாவுக்கு வர மறுத்ததால் மீரா ஜாஸ்மின், நயன்தாரா மீது 'அம்மா' கோபம்!
மலையாள நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள விழாவுக்கு வர மறுத்ததால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் அம்மாநில நடிகர் சங்கமான அம்மா-வின் நிர்வாகிகள்.
மலையாள நடிகர் சங்கத்தினர் கோழிக்கோட்டில் நாளை பிரமாண்ட கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பங்கேற்குமாறு அனைத்து நடிகர், நடிகைகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மம்முட்டி, மோகன்லால் உள்பட முன்னணி நடிகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஆனால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நயன்தாரா-பிரபுதேவா திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. எனவே தனியாக இந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாரா விரும்பவில்லையாம். ஹைதராபாத்தில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மீராஜாஸ்மினும் விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம். இதற்கு முன் நடந்த நடிகர் சங்க கூட்டங்களிலும் மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மீரா ஜாஸ்மின் மீது இந்த சங்கம் நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இப்போது கோழிக்கோடு விழாவுக்கு வர மறுத்ததால் இருவர் மீதும் நடிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.