twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விழாவுக்கு வர மறுத்ததால் மீரா ஜாஸ்மின், நயன்தாரா மீது 'அம்மா' கோபம்!

    By Shankar
    |

    மலையாள நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள விழாவுக்கு வர மறுத்ததால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் அம்மாநில நடிகர் சங்கமான அம்மா-வின் நிர்வாகிகள்.

    மலையாள நடிகர் சங்கத்தினர் கோழிக்கோட்டில் நாளை பிரமாண்ட கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பங்கேற்குமாறு அனைத்து நடிகர், நடிகைகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மம்முட்டி, மோகன்லால் உள்பட முன்னணி நடிகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஆனால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    நயன்தாரா-பிரபுதேவா திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. எனவே தனியாக இந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாரா விரும்பவில்லையாம். ஹைதராபாத்தில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    மீராஜாஸ்மினும் விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம். இதற்கு முன் நடந்த நடிகர் சங்க கூட்டங்களிலும் மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மீரா ஜாஸ்மின் மீது இந்த சங்கம் நடவடிக்கையும் எடுத்துள்ளது.

    இப்போது கோழிக்கோடு விழாவுக்கு வர மறுத்ததால் இருவர் மீதும் நடிகர்கள் மற்றும் நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.

    English summary
    Actresses Nayanthara and Meera Jasmine refused to attend the grand star night at Kozhikode, arranged by Association of Malayalam Movie Artists - AMMA. Due their refusal, AMMA office bearers ready to take disciplinary action against both actresses.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X