Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கவர்ச்சியும்-கதையும் பிரிக்க முடியாதது-சனா கான் புது விளக்கம்
சிலம்பாட்டம் படத்தில் சிலிர்க்க வைத்தவர் சனா கான். தொடர்ந்து தம்பிக்கு எந்த ஊரு படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். இரண்டிலும் கவர்ச்சிப் பாவையாக வந்து போயிருந்தார் சனா. ஆனால் தற்போது ஆயிரம் விளக்கு படத்தில் பாவாடை, தாவணியில் பாந்தமாக வருகிறாராம்.
தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி முத்திரையால் சனாவுக்கு சற்றே விசனமாம். பிறகென்ன, மும்பையில் எல்லாம் இப்படி கவர்ச்சி நடிகை, கேரக்டர் நடிகை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். கதையையும், கவர்ச்சியையும் அங்கு ஒன்றாகவே பார்ப்பார்கள். இங்குதான் கவர்ச்சி நடிகை என்று தனி முத்திரை குத்துகிறார்கள்.
நான் கவர்ச்சி நடிகை அல்ல. கதையுடன் கூடிய கவர்ச்சியில்தான் நான் நடித்துள்ளேன். ஆயிரம் விளக்கு படத்தைப் பார்த்தால் இது புரியும்.
கவர்ச்சிகரமான டிரஸ் மட்டும்தான் ஒரு நடிகையை கவர்ச்சியாக காட்டும் என்றில்லை. சாதாரண புடவையில் கூட கவர்ச்சியாக வர முடியும். ஏன், ஸ்ரீதேவி, ஹேமமாலினி ஆகியோர் புடவையில் கவர்ச்சியாக நடிக்கவில்லையா. எல்லாம் பார்ப்பவர்களின் பார்வையில்தான் உள்ளது என்று பொருமித் தள்ளி விட்டார்.
இனிமேல் சனாவை அப்படியெல்லாம் பிரிச்சுப் பாக்காதீங்கப்பா!