twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவம்: மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு

    By Siva
    |

    நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை அதாவது 11-11-11ல் பிரசவம் நடக்கிறது.

    நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை 11-11-11 என்னும் அரிய தேதி வருவதால் அன்றே பிரசவம் நடக்கவிருக்கிறது. இதற்காக ஐஸ்வர்யா ராயை மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு துணையாக கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் மற்றும் மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் தங்கியுள்ளனர்.

    பச்சன் குடும்பத்தினருக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் ஸ்பெஷல் அறை கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கியமான குடும்பம் தங்கியிருப்பதை அடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மருத்துவமனை பாதுகாவர்கள் வழக்கமாக 6 மணி நேரம் பணியாற்றுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை முன்னிட்டு அவர்களை 12 மணி நேரம் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்களும், போலீசாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஐஸ்வர்யா ராய் தங்கியிருக்கும் அறைக்குள் பார்வையாளர்கள் யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Former miss world and Bollywood actress Aishwarya Rai is going to deliver a baby on 11-11-11. She has got admitted in Seven hills hospital, Mumbai. Hubby Abhishek, in laws Amitabh and Jaya are staying with her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X