Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நமீதாவை மிஞ்சுவேன்!-இது சிந்தூரி சபதம்!
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சிந்தூரி. அடுத்து எஸ்.ஜே. சூர்யாவின் கள்வனின் காதலி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தார்.
தெலுங்கிலும் சில படங்களில் தலைகாட்டியவர், மீண்டும் தமிழுக்கே வந்து தன் திறமையைக் காட்ட முடிவு செய்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழில் நல்ல பாத்திரங்கள் அமையாததால் தெலுங்குக்கு போனேன். அங்கு நான் நடித்த குண்டம்மா காரி மனவாடு சூப்பர் ஹீட்டாக ஓடியது. பிறகு நல்ல படங்கள் அமையவில்லை. தமிழில் கிளாமராக நடிக்க வாய்ப்புகள் வந்தன. காத்திருந்தது போதும் என்று நடிக்க வந்து விட்டேன்.
எந்த மாதிரி வேடத்தில் நடிக்க அழைத்தாலும் நடிப்பேன். எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. கிடைக்கிற கேரக்டரில் நடிப்பது தான் சரியானது.
சினிமாவை பற்றி இப்போது தான் புரிந்து கொண்டேன். கிளாமராக நடிப்பது என்று வந்த பிறகு அப்படி நடிக்க மாட்டேன் இப்படி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படத்துக்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு கிளாமராக நடிப்பேன். இன்றைக்கு நமீதாதான் அதிக கவர்ச்சி காட்டுகிறார். அவரையும் மிஞ்சும் வகையில் அதிக கவர்ச்சி காட்டி பின்னுக்கு தள்ளுவேன்.
உங்களுடன் பாய்ஸ் படத்தில் நடித்த மற்ற நால்வரும்ம் உச்சத்தில் இருக்கிறார்கேள?
உண்மைதான். அவர்கள் சினிமாவை நன்கு புரிந்து பிளானோடு வந்தவர்கள். அதனால் அவர்கள் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் வெற்றியைடந்திருக்கிறார்கள். நான் இப்போது தானே சினிமாவைப் புரிந்து கொண்டேன். இனிமேல் பாருங்க, அடுத்த ஆண்டு என்னுடைய ஆண்டாக இருக்கும்.
நடிப்பு நடனம் எனக்கு தெரியும். ஒரு பாட்டுக்கும் ஆடுவேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியாக இருந்தாலும் நடிப்பேன் என்றார்.