Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிறையக் கத்துக்கிட்டேன்-சமந்தா
இவருக்கு பாணா காத்தாடி முதல் படமல்ல. மாஸ்கோவின் காவிரிதான் உண்மையில் முதல் படம். ஆனால் அப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படவே அதற்குப் பின் ஒப்புக் கொண்ட பாணா காத்தாடியில் நடித்து முடித்தார்.
அதுமட்டுமல்ல தெலுங்கில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கிலும் சமந்தாதான் நாயகி. அதாவது தெலுங்கு ஜெஸ்ஸி. இப்போது சமந்தாவை எல்லோரும் ஜெஸ்ஸி என்றுதான் கூப்பிட்டு வருகிறார்களாம், பூரிப்பாக சொல்கிறார் சமந்தா.
கை நிறையப் படங்கள் இருக்கின்றன, நிறைய பொறுப்பு வந்துள்ளதாக உணர்கிறேன், சரியாக செய்ய முயற்சிப்பேன் என்கிறார் சாந்தா படு பொறுப்புணர்ச்சியுடன்.
பாணா காத்தாடி அருமையான படம். என்னோட கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் உடனே ஒத்துக் கொண்டேன்.
அதேபோல கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. யே மாய செசவே படத்தில் ஜெஸ்ஸி கேரக்டரில் நான் நடித்தது கனவாகவே உள்ளது. ரசிகர்களுக்கு நான் செல்லமான ஜெஸ்ஸியாக மாறியுள்ளேன். அப்படி என்னை அவர்கள் கூப்பிடுவது எனக்கும் பிடித்திருக்கிறது என்றார் ஜெஸ்ஸி, அதாவது சமந்தா.
சரி எப்படி நடிகையானீர்கள் என்ற 'பாரம்பரியமான' கேள்வியை தூக்கி வைத்தபோது, எல்லோரும் போலத்தான் நானும் காலேஜ் போயிடிட்டிருந்தேன். பார்ட் டைமாக மாடலிங் செய்து வந்தேன். ஒரு சேலை விளம்பரத்தில் நான் நடித்தபோது அதை இயக்குநர் ரவிவர்மன் பார்த்து அசந்து போய், என்னை தனது மாஸ்கோவின் காவிரி படத்துக்கு நாயகியாக்கி விட்டார். இப்படித்தான் நான் நடிகையானேன் என்று பிளாஷ்பேக்கை கூறி முடித்தார்.
சமந்தா இப்போது தெலுங்கில் செம பிசி. ஜூனியர் என்டிஆருடன் பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மகேஷ்பாபுவுடனும் ஜோடி போடுகிறார். தமிழிலும் நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் தயங்காமல்.
சமந்தா நடித்த முதல் படம் இப்போதுதான் வெளியாகியிருந்தாலும் அவர் நடிக்க வந்து இரண்டரை வருடங்களாகி விட்டதாம். இந்த காலகட்டத்தில் நிறைய கற்றுக் கொண்டு விட்டாராம். பிறகென்ன பிரமாதமாக நடிக்கலாமே...!