Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நிறையக் கத்துக்கிட்டேன்-சமந்தா
இவருக்கு பாணா காத்தாடி முதல் படமல்ல. மாஸ்கோவின் காவிரிதான் உண்மையில் முதல் படம். ஆனால் அப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படவே அதற்குப் பின் ஒப்புக் கொண்ட பாணா காத்தாடியில் நடித்து முடித்தார்.
அதுமட்டுமல்ல தெலுங்கில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கிலும் சமந்தாதான் நாயகி. அதாவது தெலுங்கு ஜெஸ்ஸி. இப்போது சமந்தாவை எல்லோரும் ஜெஸ்ஸி என்றுதான் கூப்பிட்டு வருகிறார்களாம், பூரிப்பாக சொல்கிறார் சமந்தா.
கை நிறையப் படங்கள் இருக்கின்றன, நிறைய பொறுப்பு வந்துள்ளதாக உணர்கிறேன், சரியாக செய்ய முயற்சிப்பேன் என்கிறார் சாந்தா படு பொறுப்புணர்ச்சியுடன்.
பாணா காத்தாடி அருமையான படம். என்னோட கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் உடனே ஒத்துக் கொண்டேன்.
அதேபோல கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்ததும் மறக்க முடியாதது. யே மாய செசவே படத்தில் ஜெஸ்ஸி கேரக்டரில் நான் நடித்தது கனவாகவே உள்ளது. ரசிகர்களுக்கு நான் செல்லமான ஜெஸ்ஸியாக மாறியுள்ளேன். அப்படி என்னை அவர்கள் கூப்பிடுவது எனக்கும் பிடித்திருக்கிறது என்றார் ஜெஸ்ஸி, அதாவது சமந்தா.
சரி எப்படி நடிகையானீர்கள் என்ற 'பாரம்பரியமான' கேள்வியை தூக்கி வைத்தபோது, எல்லோரும் போலத்தான் நானும் காலேஜ் போயிடிட்டிருந்தேன். பார்ட் டைமாக மாடலிங் செய்து வந்தேன். ஒரு சேலை விளம்பரத்தில் நான் நடித்தபோது அதை இயக்குநர் ரவிவர்மன் பார்த்து அசந்து போய், என்னை தனது மாஸ்கோவின் காவிரி படத்துக்கு நாயகியாக்கி விட்டார். இப்படித்தான் நான் நடிகையானேன் என்று பிளாஷ்பேக்கை கூறி முடித்தார்.
சமந்தா இப்போது தெலுங்கில் செம பிசி. ஜூனியர் என்டிஆருடன் பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மகேஷ்பாபுவுடனும் ஜோடி போடுகிறார். தமிழிலும் நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் தயங்காமல்.
சமந்தா நடித்த முதல் படம் இப்போதுதான் வெளியாகியிருந்தாலும் அவர் நடிக்க வந்து இரண்டரை வருடங்களாகி விட்டதாம். இந்த காலகட்டத்தில் நிறைய கற்றுக் கொண்டு விட்டாராம். பிறகென்ன பிரமாதமாக நடிக்கலாமே...!