Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ் இயக்குநர்கள் 'வேஸ்ட்' - பத்மப்ரியா
காணாக் கண்மனி என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் பத்மப்ரியா. இந்தப் படம் குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தனது படத்தைப் பற்றி பிரஸ்தாபிக்காமல் தமிழ்த் திரையுலகினரின் திறமைகள் குறித்துப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
பத்மப்ரியாவின் பொன்மொழிகள்...
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதுதான் படத்தில் இடம் பெறுகிறது. அதுதான் திரைப்படமாக வருகிறது.
நடிகர் நடிகைகளுக்கு தமிழில் முக்கியத்துவமே இல்லை. ஆனால் மலையாளத்தில் அப்படி இல்லை. நடிகர், நடிகைகளுக்கு இங்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களின் ஈடுபாடும் படங்களில் அதிகம் உண்டு.
தமிழ்த் திரையுலக இயக்குநர்களுக்கு நடிகைளை கையாளவே தெரியவில்லை. அவர்களுக்குத் திறமை போதாது. மலையாள நடிகர், நடிகைகளை வைத்துப் படம் எடுக்கும் அளவுக்கு தமிழ் இயக்குநர்கள் திறமையில்லாதவர்கள்.
இதனால்தான் தமிழ்த் திரையுலகில் மலையாள நடிகர், நடிகைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குமுறியுள்ளார் பத்மப்ரியா.
பத்மப்ரியாவை 'வளர்த்த' சேரன் போன்ற இயக்குநர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்..?