Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கொய்னாவுக்கு ரூ. 50 லட்சம் தந்த கோடா!?
மது கோடாவின் ஊழல் வலையில் ஏகப்பட்ட பிரபலங்களும் சிக்கி வருகின்றனர். அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கோடாவுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை கொய்னா மித்ராவும், இப்போது விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக பிராண்ட் அம்பாசடராக அறிவிக்கப்பட்டவர் கொய்னா மித்ரா. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்காக கொய்னாவுக்கு அப்போதைய முதல்வர் மது கோடா பெருமளவில் பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக பிரசாரம் செய்வதற்காக ரூ. 50 லட்சம் பணம் வாங்கினார் கொய்னா என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை கொய்னா மறுத்துள்ளார்.
இதுகுறித்து கொய்னா கூறுகையில், இதெல்லாம் பொய்யான புகார்கள். உண்மையில் அவ்வளவு பெரிய தொகையை நான் மது கோடாவிடமிருந்து பெறவில்லை.
எந்தவித கட்டணமும் பெறாமல்தான் அந்த சேவையை நான் செய்தேன். இருப்பினும் ஒரு அடையாளத்திற்காக ரூ. 3 லட்சமும், பின்னர் ரூ. 11,000 மற்றும் ஒரு சால்வை, சாக்லேட்டுகள், பூக்களை மட்டுமே கோடாவிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
மேலும், அவர்களிடமிருந்து முதல் வகுப்பு வசதிகளையும் பெற்றேன். ஆனால் ரூ. 50 லட்சம் பணமெல்லாம் வாங்கவில்லை என்கிறார் கொய்னா.