Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிளிசரின் இல்லாத மதுமிதா அழுகை!
பார்த்திபனால் அறிமுகப்படுத்தப்பட்ட மதுமிதா, இங்கிலீஷ்காரன் உள்பட ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்தார்.
ஆனால் தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் வகையில் எந்தப் படமும் அமையவில்லை.
இந்நிலையில் அமீருக்கு ஜோடியாக யோகியில் நடிக்கும் வாய்ப்பு வர, இழந்ததைப் பெற்ற திருப்தி அவருக்கு.
இந்த வாய்ப்பு குறித்து என்ன சொல்கிறார் மதுமிதா?
யோகி என் வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமையும் என்ற நம்பிக்கை முதல்நாளே வந்துவிட்டது. ஒவ்வொரு சினிமா ரசிகரும் மறக்கமுடியாத பாத்திரமாக அமைந்துள்ளது யோகியில் என் கேரக்டர்.
ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் அந்தப்படத்தில்.
ஒரு காட்சியில் வசனத்துக்கு இடையில் அழ வேண்டும். கட் செய்துவிட்டு கிளிசரினும் போட முடியாது. அந்த காட்சியை என் மனதில் அமீரும், இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் அழுத்தமாகப் பதிய வைத்துவிட்டனர். காட்சி படமாகும்போது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன்.
இதில் எனது 100 சதவீத நடிப்பு வெளிப்படும். தேசிய விருது கூட கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் பெரிதும் நம்பும் இன்னொரு படம் 'சொல்ல சொல்ல இனிக்கும்'. இந்தப் படத்தில் நவ்தீப் ஜோடியாக நடிக்கிறேன், எனும் மதுமிதா, நடித்துக் கொண்டே படிப்பையும் தொடர்கிறார்.
"இப்போது எம்.பி.ஏ. படிக்கிறேன். தேர்வு நடப்பதால் இயக்குனர் அனுமதியுடன் ஷூட்டிங்கிற்கு லீவு போட்டுவிட்டுப் படித்து வருகிறேன். ஷிவ பாலாஜியுடன் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. படிப்பு முடிந்தவுடன் திருமணம். நல்ல வேடங்களாக வந்தால் திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்," என்கிறார் மதுமிதா.
நல்ல தெளிவு!
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி