கன்னடத்தில் பிரியா மணி

பாலக்காட்டில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, கண்களால் கைது செய் மூலம் தமிழுக்கு வந்தவரான பிரியா மணி, பருத்தி வீரன் மூலம் ஏற்றம் பெற்றார். அப்படம் அவருக்கு தேசிய விருதையும் வாங்கித் தந்தது. ஆனால் அதன் பின்னர் கவர்ச்சி அல்லது படு கவர்ச்சி என்ற பாலிசிக்கு தாவினார் பிரியா மணி.
இது அவருக்கு எதிர்மறையான விளைவையே கொடுத்தது. கிடைத்த பிரேக்கை நழுவ விட்டு விட்ட பிரியா மணி தற்போது தெலுங்கில் படு கிளாமராக நடிக்கவும் துணிந்து விட்டார்.
இந்த நிலையில் முதல் முறையாக கன்னடத்திலும் அவர் நடிக்கப் போகிறார். பெங்களூரில் வளர்ந்த பெண்ணான பிரியா மணி, இப்போதுதான் கன்னடத்தில் நடிக்கப் போகிறார் என்பது விசேஷமானது.
தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படமான ரெடி என்ற படத்தை கன்னடத்தில் ராம் என்ற பெயரில் தயாரிக்கின்றனர். இதில், புனீத் ராஜ்குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் பிரியா மணி.
ஏற்கனவே சில முறை கன்னட வாய்ப்புகள் பிரியாவைத் தேடி வந்தன. ஆனால் சம்பளம் போதாது என்பதால் அவற்றை நிராகரித்து விட்டார் பிரியா மணி. ஆனால் ராம் படத்தி்ல் அவருக்கு திருப்திகரமான சம்பளம் பேசியுள்ளனராம்.
இப்படத்தை ஆதித்யா பாபு தயாரிக்கிறார்.
தற்போது பிரியா மணி கையில் மணிரத்தினத்தின் அசோக வனம், தெலுங்கில் மித்ருடு மற்றும் வெங்கடேஷுடன் இன்னொரு தெலுங்குப் படம் ஆகியவை உள்ளன.


Click it and Unblock the Notifications