'விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்' -படப்பிடிப்புகாக இலங்கை போனார் ஸ்ரேயா!

இப்போது சத்தமில்லாமல் இன்னொரு நடிகை இலங்கைக்குப் போயிருக்கிறார். அவர் ஸ்ரேயா.
தீபா மேத்தா இயக்கும் விண்ட்ஸ் ஆப் சேஞ்ச் படத்தின் ஷூட்டிங்குக்காக அவர் இலங்கையில் இப்போது முகாமிட்டுள்ளார்.
கடந்த வாரம் சென்னையில நடந்த ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் அவர் ஷாரூக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடியது நினைவிருக்கலாம். இலங்கையில் படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்த அவர், நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இலங்கை சென்றுவிட்டாராம்.
இலங்கை மிக அழகான நாடு, படப்பிடிப்புக்கு ஏற்ற நிறைய இடங்கள் இங்குள்ளன, என்றெல்லாம் பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் ஸ்ரேயா. அடுத்து இலங்கை அரசுக்கு சான்றிதழ் தரப் போகிறாரோ
மேடம் ஷிராந்தியுடன் டீ பார்ட்டி எப்போ ஸ்ரேயா?


Click it and Unblock the Notifications











