Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ் படமா?: நைசாக நழுவும் வித்யா பாலன்!
நடிகை வித்யா பாலனை தமி்ழில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் கேட்டால் சாரி பிஸி என்று பிடி கொடுக்காமல் பேசுகிறாராம்.
பாலிவுட்டில் நடிப்பில் பெயர் எடுத்தவர் வித்யா பாலன். தமிழில் ஸ்ரீகாந்த், த்ரிஷா நடித்த மனசெல்லாம் படத்தில் முதலில் வித்யா பாலனைத் தான் ஒப்பந்தம் செய்தனர். அவர் சில நாட்கள் படப்பிடிப்புக்கும் வந்திருக்கிறார். பின்னர் அவருக்கு நடிக்க வரவில்லை என்று கூறி அனுப்பி வைத்துவிட்டனர்.
நடிக்கவே தெரியவில்லை என்று ஒதுக்கப்பட்ட வித்யா பாலன் தன் நடிப்புத் திறமையை பாலிவுட்டில் காட்டினார். பாலிவுட்டும் அவரை நல்லபடியாக வரவேற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. மணி ரத்னத்தின் குரு படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்போது வித்யாவின் பெயர் அதிக அளவில் உச்சரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த சூட்டோடு சூடாக, வித்யாவை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வரும் முயற்சிகளில் சிலர்இறங்கியுள்ளனராம்.
தமிழ் இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகியுள்ளனர். அதற்கு வித்யா ஸாரி நான் இந்தியில் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
'பழைய' காயம் இன்னும் ஆறவில்லை போலும்...!