Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரும்பி வந்த கோபிகா!
கல்யாணமாகி ஒரு 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நடிகையும் வழக்கமாக உபயோகிக்கும் வசனம்தான் இது.
இந்தமுறை உதிர்ந்திருப்பது திருமதி கோபிகா வாயிலிருந்து!.
6 மாதங்களுக்கு முன் டாக்டர் அஜிலேஷ் என்பவருடன் திருமணமாகி ஐஸ்லாந்தில் போய் செட்டிலாகிவிடப் போகிறேன் என்று போனவர், அந்த வேகத்திலேயே கேரளா திரும்பியிருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு இவர் ஜெயராமுடன் நடித்த வருதே ஒரு பார்யா படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டு, விருது என ராஜ மரியாதை.
இந்த விருதைப் பெற்றுக்கொள்ள கேரளா வந்த திருமதி கோபிகாவுக்கு, மீண்டும் ஐஸ்லநாது போகவே மனசில்லையாம்.
போதாக்குறைக்கு, பல பெரிய வாய்ப்புகள், அஜிலேஷ் வாழ்நாள் பூரா கஷ்டப்பட்டாலும் சம்பாதிக்க முடியாத அளவு சம்பளம் என தமிழ், மலையாள திரையுலகம் ஆசைகாட்ட, இவர் இங்கிருந்தபடியே கணவரிடம் அனுமதி வாங்கிவிட்டாராம்.
புதிதாக இரு மலையாளப் படங்கள், ஏவிஎம் தயாரிக்கும் ஒரு தமிழ் படம் என வாய்ப்புகளை ஒப்புக் கொண்டுள்ளார் கோபிகா.
திருமணமான பிறகும் அழகு குறையாமல் அசத்தலாக இருப்பதால் சோலோ ஹீரோயினாகவே வந்திருக்கிறதாம் எல்லா படங்களிலும், கோபிகாவுக்கு.