Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மல்லிகாவை 'காத்த' ரஜினி
கமல் நடித்த தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. முதல் ஆடியோ சிடியை முதல்வர் வெளியிட ஹாலிவுட் ஆக்ஷன் கிங் ஜாக்கி சான் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில், நடிகை மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற 'சீ-த்ரு' கவுன் அவரது முதுகை அப்பட்டமாக காட்டியது. இதனால் எழுந்த பெரும் சர்ச்சையை அடுத்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காக ஷெராவத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் உள்பட பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் முன்னிலையில் மரியாதைக்குறைவாக கால்மேல் கால் போட்டு அமர்ந்தும், கவர்ச்சியாக ஆடை அணிந்தும் இருந்த மல்லிகா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்து மக்கள் கட்சி போலீசில் புகாரும் செய்தது.
இந்த எதிர்ப்பை எதிர்பாராத மல்லிகா கலங்கிப் போய்விட்டார். வேறுவழியில்லாவிட்டால் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்ற முடிவிலிருந்த மல்லிகாவுக்கு, அவரே சற்றும் எதிர்பாராத ஒரு மிகப் பெரிய இடத்திலிருந்து அபயக்கரம் நீண்டது. அதுதான் தமிழகத்தின் பவர்ஹவுஸ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர்தான் இந்துமத அமைப்புகளிடமும் இதர ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானப்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.
ஜாக்கிசானைப் போல மல்லிகாவையும் அந்த விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினராக கருதி இந்த பிரச்னையை மேற்கொண்டு ஜவ்வாக இழுக்காமல் வி்ட்டுவிடுமாறு தலைவர்களுக்கு அன்புக்கட்டளை இட்டாராம் ரஜினி.
இதன்பிறகே இந்த விவகாரம் அடங்கியதாகத் தெரிகிறது. ரஜினியின் உதவிக்கு மறக்காமல் நன்றியும் தெரிவித்துள்ளார் மல்லிகா.
இதேபோல் 'சிவாஜி' விழாவில் படத்தின் நாயகி ஸ்ரேயா கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்தபோதும் எழுந்த சர்ச்சையிலும் ரஜினிதான் முதல்வரிடம் பேசி போலீசாரின் வேகத்தைக் குறைத்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த செய்தி எதையும் சூப்பர்ஸ்டார் தரப்பில் உறுதிசெய்ய மறுக்கிறார்கள்.
கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா, 'கொஞ்சம் அடங்குங்கம்மா'.
இது எப்டி இருக்கு?
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!