Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மனவளம் குறைந்த குழந்தைகளுடன் சினேகா 'பர்த்டே'!
அப்படி என்ன செய்தார்...?
"பெரிய பிளானெல்லாம் போட்டு எதுவும் பண்ணலைங்க. காலைல அப்பா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டேன். அடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்குப்போய் சில உதவிகள் செய்தேன்.
என்னுடைய ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது. அவர்களுடன் கேக் வெட்டி இந்த பிறந்தநாளைக் கொண்டாடினேன். மனசுக்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,..," என்றார், தனது 'பிராண்ட்' புன்னகையுடன்.
பாலவிகார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்களை முழுவதுமாக தன் செலவில் வாங்கித் தந்தார்.
பாலவிஹாரின் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சினேகா, இனிப்புகள், எழுதுபொருள்கள் என அவர்கள் கேட்ட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார்.
இன்று பிற்பகல் வரை அங்கேயே இருந்த சினேகா, பாலவிகார் குழந்தைகளுடன் சந்தோஷமாக ஆடிப் பாடினார். அவர்கள் மத்தியில் கேக் வெட்டியபோது 100 குழந்தைகளும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர்.
2007-ம் ஆண்டு 15000 ரசிகர்கள் தனக்கு ஒரு சேர பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதை இது நினைவுபடுத்துவதாக இருந்தது என நெகிழ்ந்தார் சினேகா. பின்னர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி விட்டார்.
பின்னர் சினேகாவே கைப்பட அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறினார்.
முன்னதாக பாலவிஹார் வந்த சினேகாவுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பளித்தனர் அவரது ரசிகர்கள். சினேகாவை மகிழ்விக்கும் வகையில் ரோபோ சங்கர் மற்றும் அவரது குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமலும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் நடித்துக் காட்டியதை ரசித்து மகிழ்ந்தார் சினேகா.
சினேகாவின் மக்கள் தொடர்பாளர் ஜான், சினேகா ரசிகர் மன்ற தலைவர் செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.