Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மனவளம் குறைந்த குழந்தைகளுடன் சினேகா 'பர்த்டே'!
அப்படி என்ன செய்தார்...?
"பெரிய பிளானெல்லாம் போட்டு எதுவும் பண்ணலைங்க. காலைல அப்பா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டேன். அடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்குப்போய் சில உதவிகள் செய்தேன்.
என்னுடைய ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது. அவர்களுடன் கேக் வெட்டி இந்த பிறந்தநாளைக் கொண்டாடினேன். மனசுக்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,..," என்றார், தனது 'பிராண்ட்' புன்னகையுடன்.
பாலவிகார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்களை முழுவதுமாக தன் செலவில் வாங்கித் தந்தார்.
பாலவிஹாரின் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சினேகா, இனிப்புகள், எழுதுபொருள்கள் என அவர்கள் கேட்ட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார்.
இன்று பிற்பகல் வரை அங்கேயே இருந்த சினேகா, பாலவிகார் குழந்தைகளுடன் சந்தோஷமாக ஆடிப் பாடினார். அவர்கள் மத்தியில் கேக் வெட்டியபோது 100 குழந்தைகளும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர்.
2007-ம் ஆண்டு 15000 ரசிகர்கள் தனக்கு ஒரு சேர பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதை இது நினைவுபடுத்துவதாக இருந்தது என நெகிழ்ந்தார் சினேகா. பின்னர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி விட்டார்.
பின்னர் சினேகாவே கைப்பட அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறினார்.
முன்னதாக பாலவிஹார் வந்த சினேகாவுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பளித்தனர் அவரது ரசிகர்கள். சினேகாவை மகிழ்விக்கும் வகையில் ரோபோ சங்கர் மற்றும் அவரது குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமலும் சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் நடித்துக் காட்டியதை ரசித்து மகிழ்ந்தார் சினேகா.
சினேகாவின் மக்கள் தொடர்பாளர் ஜான், சினேகா ரசிகர் மன்ற தலைவர் செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.