Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்னேகா உல்லாலின் சிம்பு ஆசை
சீனியர் நடிகைகள் தொடர், புது நடிகைகள் வரை பேட்டி கொடுக்கும்போது, தவறாமல் சிம்புவுடன் நடிக்க ஆசை என்று சொல்லி வைக்கிறார்கள்.
முன்பு ரம்யா கிருஷ்ணன், ஸ்னேகா, நிலா... இப்போது ஸ்னேகா உல்லால்.
இவர் லக்கி என்ற இந்தி படத்தில், சல்மான்கான் ஜோடியாக நடித்துப் பிரபலமானவர். இவர், இப்போது என்னை தெரியுமா என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.
இந்த படம், நேனு நீகு தெலுசா? என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகிறது.
நடிகர் மோகன்பாபுவின் சொந்தப் படம் இது. அவர் இளைய மகன் மனோஜ்குமார்தான் கதாநாயகன்.
பார்க்க கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராயின் தங்கை போலத் தெரியும் ஸ்னேகா உல்லால், தனது தமிழ்ப் பிரவேசம் குறித்து கூறுகையில்,
தமிழ்ப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் சிம்புதான். காரணம் எனக்கு அறிமுகமான பிரபலமான தமிழ் கதாநாயகன் அவர்தான். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.
இப்போது நான் நடிக்கும் என்னைத் தெரியுமா படத்திலேயே கூட மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் நடித்துள்ளேன். அவர்கள் நினைத்த மாதிரி காட்சி வரவேண்டும் என்பதற்காக என்னை டார்ச்சர் செய்துவிட்டார்கள்.
என் பெயரோடு ஒட்டியுள்ள உல்லால் என்ற பெயர் எனது குடும்பப் பெயர். ஏற்கெனவே ஒரு ஸ்னேகா இருப்பதால், உல்லால் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்றார்.