Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்னேகா உல்லாலின் சிம்பு ஆசை
சீனியர் நடிகைகள் தொடர், புது நடிகைகள் வரை பேட்டி கொடுக்கும்போது, தவறாமல் சிம்புவுடன் நடிக்க ஆசை என்று சொல்லி வைக்கிறார்கள்.
முன்பு ரம்யா கிருஷ்ணன், ஸ்னேகா, நிலா... இப்போது ஸ்னேகா உல்லால்.
இவர் லக்கி என்ற இந்தி படத்தில், சல்மான்கான் ஜோடியாக நடித்துப் பிரபலமானவர். இவர், இப்போது என்னை தெரியுமா என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.
இந்த படம், நேனு நீகு தெலுசா? என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகிறது.
நடிகர் மோகன்பாபுவின் சொந்தப் படம் இது. அவர் இளைய மகன் மனோஜ்குமார்தான் கதாநாயகன்.
பார்க்க கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராயின் தங்கை போலத் தெரியும் ஸ்னேகா உல்லால், தனது தமிழ்ப் பிரவேசம் குறித்து கூறுகையில்,
தமிழ்ப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் சிம்புதான். காரணம் எனக்கு அறிமுகமான பிரபலமான தமிழ் கதாநாயகன் அவர்தான். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.
இப்போது நான் நடிக்கும் என்னைத் தெரியுமா படத்திலேயே கூட மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் நடித்துள்ளேன். அவர்கள் நினைத்த மாதிரி காட்சி வரவேண்டும் என்பதற்காக என்னை டார்ச்சர் செய்துவிட்டார்கள்.
என் பெயரோடு ஒட்டியுள்ள உல்லால் என்ற பெயர் எனது குடும்பப் பெயர். ஏற்கெனவே ஒரு ஸ்னேகா இருப்பதால், உல்லால் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்றார்.