Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சூதாட்டத்தில் பணத்தை இழந்த த்ரிஷா!
சமீபத்தில் தோழிகளில் பெட்டிங் வைத்து சூதாட்டம் ஆடினாராம் த்ரிஷா. இந்த விளையாட்டு வேண்டாம் என்று அவரது அம்மா உமா சொல்லியும் கேட்காமல் ஆடினாராம். இதில் அவர் ஒரு முறை கூட ஜெயிக்காமல் பணத்தை இழந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பணம் வைத்து சூதாடுவது தவறு என்று சிறுவயதிலேயே அம்மா அடிக்கடி சொல்வாங்க. எக்காரணம் கொண்டும் பணம் வைத்து சூதாடக் கூடாது என்று என்னிடம் உறுதிமொழியும் வாங்கியிருந்தார்.
ஆனா நான் இன்னும் குழந்தையில்லையே... விவரம் தெரிந்த வயது என்பதால் ஆர்வத்தில் ஒருமுறை ஆடித்தான் பார்ப்போமே என்று சூதாட்டத்தில் இறங்கினேன். இன்னொன்று என் தோழிகள் எல்லோருமே பெட்டிங் ஆடுவதில் கில்லாடிகள். அதனால் எனக்கும் அதுபோன்று ஆட ஆசை வந்தது.
சமீபத்தில் தோழிகளுடன் பெட்டிங் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டேன். எல்லா ஆட்டங்களிலும் தோழிகளே ஜெயித்தனர். நான் அதிக பணத்தை இழந்து நஷ்டப்பட்டேன்.
அப்போதுதான் அம்மா எதற்காக பணம் கட்டி சூதாடக்கூடாது என்று தடுத்தார் என்பது புரிந்தது. இனிமேல் ஒருபோதும் பணம் வைத்து சூதாடுவதில்லை என்று சபதமே செய்துவிட்டேன்..." என்றார்.