அந்த மாதிரி ரோல்தான் பண்ணச் சொல்றாங்க...! - ஹாசினி

வேள்வி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹாசினி. மூன்று காமுகர்களால் பலாத்காரம் செய்யப்படும் ஒரு பெண், பின்னர் தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கிய அனைவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொல்வது போன்ற பாத்திரத்தில் நடித்து பரபரப்பேற்படுத்தினார்.
இந்நிலையில் நிருபர்களைச் சந்தித்த ஹாசினி தனது திரையுலக அனுபவம் குறித்து கூறியதாவது:
வேள்வி படத்தில் ஹீரோவை பலாத்காரம் செய்வது போன்ற காட்சியில் நடித்ததற்கு எதிர்ப்பும், ஆதரவும் மாறி மாறி வருகின்றன. இது நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் எதிர்பார்த்ததுதான்.
இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன் என்று எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது என்ற முடிவோடுதான் நடிக்க வந்திருக்கிறேன். காரணம் அந்த நிலையிலும் நான் இல்லை. தற்போது திரு.நா, மேதை படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.
வேள்வி படம் பார்த்தவர்கள் பிரச்னைக்குரிய கேரக்டர்களில் நடிக்க கேட்டு வருகிறார்கள். ஒரு படத்தில் அந்த மாதிரி நடித்தால் எல்லா படத்திலும் அப்படியே நடிக்க முடியுமா?
எல்லா படத்திலும் ஹீரோவை நான் கற்பழிப்பது போல நடித்தால் நன்றாகவா இருக்கும்? என்று கேட்கிறார் ஹாசினி.
என்னத்தச் சொல்றது!


Click it and Unblock the Notifications











