பாரதிராஜா பட நாயகியானார் இனியா!

பாரதி ராஜா அடுத்து இயக்கும் படம் அன்னக் கொடியும் கொடி வீரனும். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பார்த்திபன் ஹீரோவாக நடிக்கிறார். மீனாள் முக்கிய வேடத்தில் வருகிறார்.
படத்தின் நாயகி யார் என்று பாரதிராஜா முடிவு செய்யாமல் இருந்தார். வாகை சூடவா படம் பார்த்த பிறகு, தனது படத்தின் நாயகி என்ற அந்தஸ்தை இனியாவுக்கு வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தலையாய கலைஞர்களில் ஒருவரான பாரதிராஜாவின் படத்தில் நடிப்பது பல நடிகைகளுக்கும் ஒரு கனவு. ஆனால் அந்த வாய்ப்பு வலுவில் வந்திருக்கிறது இனியாவுக்கு.
இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும் என பாரதிராஜா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications