Don't Miss!
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- News லாட்ஜ்ஜில் யாரது? இங்கே என்ன வேலை? உடனே வெளியேறுங்க.. சென்னையில் சாட்டையை சுழட்டும் போலீஸ் - அதிரடி
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
குமாரசாமி, குழந்தையுடன் குட்டி ராதிகா-கர்நாடகத்தில் பரபர!
குமாரசாமியும், குட்டி ராதிகாவும் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நீண்ட காலமாகவே ஒரு செய்தி கர்நாடகத்தில் உலவி வருகிறது. இந்த நிலையில் குட்டி ராதிகாவுடன், கையில் குழந்தையை ஏந்தியபடி குமாரசாமி காட்சி தரும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை குட்டி ராதிகாவே ரிலீஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே குமாரசாமிக்கு அனிதா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குட்டி ராதிகா மீது அவர் காதல் வயப்பட்டார். பின்னர் ரகசிய வாழ்க்கை வாழத் தொடங்கியதாக தெரிகிறது. இந்த ரகசிய வாழ்க்கையின் விளைவாக, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக கூறப்படுகிறது. தனது குழந்தையின் பெயர் ஷமீகா கே.சாமி என்று குட்டி ராதிகா முன்பே தெரிவித்திருந்தார். தற்போது ஷமீகாவின் தந்தை குமாரசாமிதான் என்பதை நிரூபிக்கும் வகையிலான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் தான் ஒரு அரசியல் தலைவருடன் குடும்பம் நடத்தி வருவதாகவும், மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும், தனக்குப் பெண் குழந்தை இருப்பதாகவும், அதன் பெயர் ஷமீகா கே. சாமி என்றும் பகிரங்கமாக அறிவித்தார் குட்டி ராதிகா. இதன் மூலம்தான் குமாரசாமியின் ரகசிய வாழ்க்கை அம்பலமானது.
தற்போது குமாரசாமியும், குட்டி ராதிகாவும், கையில் குழந்தையை ஏந்தியபடி நெருக்கமாக நின்றபடி காட்சி தரும் புகைப்படம் வெளியாகியிருப்பது குமாரசாமி எதிர்ப்பாளர்களுக்கு குறிப்பாக பாஜகவினருக்கு பெரும் சந்தோஷமான செய்தியாக மாறியிருக்கிறது.
அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதாதளம் இதை சதி வேலை என்று வர்ணித்துள்ளது.