Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நமீதாவை காக்க வைக்காமல் வழிய(ந்த)னுப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் – கொந்தளித்த விமான பயணிகள்
நடிகர், நடிகையர் என்றால் வானத்திலிருந்து வந்து குதித்த தேவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள் பலரும். ஆனால் இந்த செயலால் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டகதை சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 11.50க்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது.
பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த விமானத்தில் செல்ல டைட் பேன்ட், டீ ஷர்ட், கூலிங் கிளாஸ் அணிந்தபடி கவர்ச்சி நடிகை நமீதா 11 மணிக்கு வந்தார்.
டாக் டாக் என்று நடை போட்டு வந்த நமீதா, அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை விரல் சொடுக்கி அழைத்து, நான் நடிகை, நானும் வரிசையில் நிற்க வேண்டுமா?" என்று கேட்டார்.
நமீதாவைப் பார்த்த அந்த வீரர், வரிசையில் நின்ற பயணிகளைத் தாண்டி, நமீதாவை மட்டும் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் பெண் அதிகாரிகள் நமீதாவை சோதனையிட்டனர்.
நமீதாவுக்கு கொடுக்கப்பட்ட முதல் மரியாதையைப் பார்த்து, கால் கடுக்க நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த பயணிகள் கொந்தளித்து விட்டனர்.
நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரை போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்த சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் சண்டை பிடித்தனர்.
இதை எதிர்பாராத பாதுகாப்பு வீரர்கள், தயவு செய்து இதை பெரிதுபடுத்த வேண்டாம். இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.