மண்டோதரி...ரீமா சென்னும் மறுப்பு!

ராவணன் படத்தில் ஏற்கெநவே முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், அவர் கணவர் அபிஷேக் பச்சன், விக்ரம், ப்ரியா மணி எனபல முன்னணி கலைஞர்கள் நடித்து வருகின்றனர். இப்போது மண்டோதரி வேடத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகை தேவை. இதுவரை நான்கு நடிகைகளிடம் கேட்டுப் பார்த்தும் ஒருவரும் நடிக்க முன்வரவில்லையாம்.
இது மணிரத்னத்துக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளதாம்.
முதலில் அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள்... அவரோ அருந்ததி கொடுத்த மகா வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார். ராவண் படத்தில் மூன்றாவது நாயகி என்றதும் முகத்தைச் சுளித்தபடி மறுத்து விட்டாராம். பின்னர் ஸ்ரேயாவிடம் கேட்டார்களாம். அவரிடமிருந்தும் அதே பதில்.
சில தினங்களுக்கு முன் நயன்தாராவை அணுக, அவர் ஆதவனைக் காரணம் காட்டி மறுத்துள்ளார். அடுத்து இப்போது ரீமா சென்னைக் கேட்டார்களாம். அவரோ, புதிய படம் ஒன்றில் நடிப்பதாகக் கூறிவிட்டாராம். மேலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் வேறு இன்னும் இழுத்துக் கொண்டிருப்பதால் நடிப்பது சாத்தியமில்லை என்றாராம் மணிரத்னம் சார்பில் தன்னைப் பார்க்க வந்த சுகாசினியிடம்.


Click it and Unblock the Notifications











