Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மண்டோதரி...ரீமா சென்னும் மறுப்பு!
ராவணன் படத்தில் ஏற்கெநவே முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், அவர் கணவர் அபிஷேக் பச்சன், விக்ரம், ப்ரியா மணி எனபல முன்னணி கலைஞர்கள் நடித்து வருகின்றனர். இப்போது மண்டோதரி வேடத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகை தேவை. இதுவரை நான்கு நடிகைகளிடம் கேட்டுப் பார்த்தும் ஒருவரும் நடிக்க முன்வரவில்லையாம்.
இது மணிரத்னத்துக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளதாம்.
முதலில் அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள்... அவரோ அருந்ததி கொடுத்த மகா வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார். ராவண் படத்தில் மூன்றாவது நாயகி என்றதும் முகத்தைச் சுளித்தபடி மறுத்து விட்டாராம். பின்னர் ஸ்ரேயாவிடம் கேட்டார்களாம். அவரிடமிருந்தும் அதே பதில்.
சில தினங்களுக்கு முன் நயன்தாராவை அணுக, அவர் ஆதவனைக் காரணம் காட்டி மறுத்துள்ளார். அடுத்து இப்போது ரீமா சென்னைக் கேட்டார்களாம். அவரோ, புதிய படம் ஒன்றில் நடிப்பதாகக் கூறிவிட்டாராம். மேலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் வேறு இன்னும் இழுத்துக் கொண்டிருப்பதால் நடிப்பது சாத்தியமில்லை என்றாராம் மணிரத்னம் சார்பில் தன்னைப் பார்க்க வந்த சுகாசினியிடம்.