twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுனேனாவுக்கு பாவாடை, தாவணியால் வந்த பிரச்சனை

    By Siva
    |

    சும்மா, சும்மா பாவாடை, தாவணியில் வரும் கிராமத்துப் பெண்ணாக நடிக்கவே அழைத்தார்கள் அதனால் தான் வம்சம் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டேன் என்று நடிகை சுனேனா தெரிவித்தார்.

    வம்சம் படத்தில் கருணாநிதி குடும்பத்து வாரிசான அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த சுனேனாவை அதற்குப் பிறகு ஆளையே காணோம். அவரைத் தேடிக் கண்டுபிடித்து காரணம் கேட்டதற்கு எல்லாம் பாவாடை, தாவணியால் வந்த இடைவெளி என்றார். என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது,

    வம்சம் படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாக வந்தேன். அந்த படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த 4,5 படங்களில் பாவாடை தாவணி அணியும் கிராமத்துப் பெண் கதாபாத்திரமாகத் தான் இருந்தது.

    இது என்னடா ஒரே பாவாடை, தாவணியாக இருக்கிறது என்ற பயமே வந்துவிட்டது. அதனால் தான் மாறுதல் வேண்டி வம்சம் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டேன். அதனால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. சமரன் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறேன். அதில் த்ரிஷாவும் உள்ளார்.

    மேலும் ராசு மதுரவனின் படத்திலும் நடிக்கிறேன். இந்த 2 படங்களிலுமே எனக்கு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் இல்லை என்பது சந்தோஷமான விஷயம். மாடர்ன் பெண்ணாக வருகிறேன். சமரன் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.

    நான் நடித்துள்ள 'திருத்தணி", 'கதிர்வேல்" ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன என்றார்.

    English summary
    Actress Sunaina who was missing after Vamsam is back in a new get-up. She kept herself away from the bigscreen after Vamsam as she had got village characters only. Now she is back pairing up with Vishal in Samaran and that too in a modern girl get-up.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X