Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரசவத்துக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்!
அவருக்கு வரும் வியாழன் கிழமைக்குள் குழந்தை பிறக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய்க்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்ன குழந்தை பிறக்கும்? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் நாடெங்கும் உள்ள ரசிகர்களிடம் நிலவுகிறது.
ஐஸ்வர்யாராய்க்கு கடந்த 11-11-11 அபூர்வ தினத்தன்று குழந்தை பிறக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பல கோடிக்கு பெட் கட்டி ஏமாந்தனர் நிறைய பேர்.
இந்த சூதாட்டத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் பணம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் மும்பை அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள 5-வது மாடியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த மாடியில் உள்ள எல்லா அறைகளையும் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் முன்பதிவு செய்து தங்கியுள்ளனர்.
ஐஸ்வர்யா ராயை இன்று காலை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக திருப்தி தெரிவித்தனர். 17-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் கணித்துள்ளனர்.