twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரசவத்துக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்!

    By Shankar
    |

    மும்பை: பிரசவத்துக்காக மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராய்.

    அவருக்கு வரும் வியாழன் கிழமைக்குள் குழந்தை பிறக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா ராய்க்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்ன குழந்தை பிறக்கும்? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் நாடெங்கும் உள்ள ரசிகர்களிடம் நிலவுகிறது.

    ஐஸ்வர்யாராய்க்கு கடந்த 11-11-11 அபூர்வ தினத்தன்று குழந்தை பிறக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பல கோடிக்கு பெட் கட்டி ஏமாந்தனர் நிறைய பேர்.

    இந்த சூதாட்டத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் பணம் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் மும்பை அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்குள்ள 5-வது மாடியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அந்த மாடியில் உள்ள எல்லா அறைகளையும் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் முன்பதிவு செய்து தங்கியுள்ளனர்.

    ஐஸ்வர்யா ராயை இன்று காலை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக திருப்தி தெரிவித்தனர். 17-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் கணித்துள்ளனர்.

    English summary
    On Sunday night, Aishwarya Rai Bachchan was paying a visit to the Seven Hills hospital in Marol, northwest Mumbai, where she is expected to deliver her first child. Now she is admitted in the 5th floor of the hospital and her family accompanied her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X