Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமாவில் பிசி - ரியாலிட்டி ஷோக்களுக்கு ஐஸ்வர்யா டாடா
சமீபத்தில், சோனி டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் பிரீமியர் லீக் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க வருமாறு ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் நிறைய சம்பளம் கேட்டதாக கிசுகிசு கிளம்பியது. தற்போது இந்த நிகழ்ச்சியை ராணி முகர்ஜியும், டான்ஸ் மாஸ்டர் ஷியாமக் தவாரும் இணைந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் பி.ஆர்.ஓ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்க வருமாறு ஐஸ்வர்யா ராய்க்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. ஆனால் அவர் தற்போது நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேரமோ போதாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் வருகிற அழைப்புகளை பரிசீலிக்கக் கூட அவருக்கு நேரம் இல்லாத நிலை.
மற்றபடி அவர் கூடுதல் சம்பளம் கேட்கிறார் என்பதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் தற்போது குஷாரிஸ், ஆக்ஷன் ரீப்ளே, ராவண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராவண் படம் ஏகப்பட்ட சிக்கலில் மாட்டி தொக்கி நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.