என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை!

இதை கிட்டத்தட்ட முன்னணி நாயகிகள் இல்லாத வறட்சி நிலை என்று கூட கூறலாம்.
முதலில் ஆசின். படு வேகமாக தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த ஆசின், ஒரு அருமையான நாளில் மும்பைக்கு இடம் பெயர்ந்து போனார். இப்போது அங்கேயே செட்டிலாகி விட்டார். நல்ல படம் கிடைத்தால்தான் தமிழில் மறுபடியும் நடிப்பேன் என்கிறார்.
அடுத்து நயனதாரா. கையில் இருக்கும் ஆதவன் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை நயனதாரா. புதிய கமிட்மென்ட்டில் அவர் இருப்பதால் அந்தப் பஞ்சாயத்தை தீர்த்து விட்டுத்தான் மறுபடியும் அவர் நடிப்பார் என்று பேச்சு உள்ளது.
அடுத்தவர் ஷ்ரியா. கந்தசாமியில் நடித்து முடித்து விட்ட ஷ்ரியா, தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிறகு திரிஷா. இவர் புதிதாக பாலிவுட் பக்கம் போன தென்னகத்து நாயகி. புதிய தமிழ்ப் படம் எதையும் இப்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்து வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டார். அக்ஷய்குமாருடன் இணைந்து நடிக்கப் போகும் நாளுக்காக தயாராகி வருகிறார்.
இப்படி முன்னணி நாயகிகள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல சடாரென்று மாயமாகி விட்டதால், தமிழத் திரையுலகில் முதல் முறையாக முன்னணி நாயகிகள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமன்னா, பிரியா மணி ஆகியோர் மட்டுமே இப்போது பாக்கி உள்ளனர். அவர்களில் தமன்னா படு பிசியாக உள்ளார். பிரியா மணி மட்டும்தான் தற்போது கொஞ்சம் ப்ரீயாக இருப்பவர்.
இந்த நிலையில், கோலிவுட்டில் ஏற்பட்டுள்ள இந்த புதிய சூழ்நிலையைப் பயன்படுத்தி டாப் கியரில் உள்ளே புகுந்து டாப்புக்குப் போகும் ஆசையில் உள்ளாராம் அருந்ததீ புகழ் அனுஷ்கா.
வேட்டைக்காரனில் விஜய்யுடன் ஜோடி போட்டிருக்கும் அவர் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய் படத்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் சிங்கம், அவரது தம்பி பருத்தி கார்த்தியுடன் ஒரு படம் என புக் ஆகியுள்ளார் அனுஷ்கா.
இப்படி முன்னணி நாயகிகள் 'ஒட்டுக்காக' எஸ்கேப் ஆகி விட்டதால் ஹீரோக்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குழம்பிப் போயுள்ளனராம்.
போனவாளைப் பார்த்து ஏன் புலம்பிண்டிருக்கேள், இருக்கிறவாளை வெச்சு அட்ஜஸ்ட் பண்ணுங்கோண்ணா..


Click it and Unblock the Notifications











