Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
நமீதா ஆட்டம்-கூடியது பெருங்கூட்டம்
லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் படம் பாண்டி. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஸ்னேகா. படத்தில் நமீதாவும் இருக்கிறார். அவருக்காக கிளுகிளு பாட்டை வைத்துள்ளனர்.
இந்தப் பாட்டை பட்டையைக் கிளப்பும் வகையில் செம்பட்டி அருகே படமாக்க தீர்மானித்து அங்கு முகாமிட்டனர்.
கேத்தைய கவுண்டன்பட்டி தோட்டப் பகுதிகளிலும், நடுப்பட்டி என்ற இடத்தில் நடு சாலையிலும் நமீதாவையும் கூடவே லாரன்ஸையும் ஆட விட்டுப் படமாக்கினர்.
இந்தத் தகவல் காட்டுத் தீ போல அக்கம் பக்கத்து கிராமங்களுக்குப் பரவியது. இதையடுத்து கைக்கு கிடைத்த வாகனங்களைப் போட்டுக் கொண்டு மக்கள் நமீதாவை 'தரிசிக்க' பறந்தனர். பள்ளிக்கூட மாணவ, மாணவியர் முதல் பல் போன தாத்தாக்கள், பாட்டிக்கள் வரை பல தரப்பட்ட மக்களும் படையெடுத்து வந்து நமீதாவை பார்த்து பரவசப்பட்டனர்.
படு கிளாமரான உடையில் இருந்த நமீதா, இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும், சற்றே பதறித்தான் போனார்.
இப்படி முக்கியமான சாலையில் பெரும் கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து படப்பிடிப்புக் குழுவினரைக் கண்டித்தனர்.
ஏற்கனவே இப்பகுதிகளில் கோவில் விழாக்களில் ஆபாச ஆட்டம் ஆடக் கூடாது என நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். ஆனால் இப்படி நடுச் சாலையில் ஆபாசமான டான்ஸ் ஆடுவதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கூறி படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் நமீதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கூட்டமும், பிரிய முடியாமல் ஏக்கத்துடன் கலைந்து சென்றது.
இருப்பினும், நிலக்கோட்டை அருகே பேரணை பாலம் என்ற இடத்தில் உரிய போலீஸ் அனுமதியுடன் நமீதா, லாரன்ஸ் பாட்டை பக்காவாக படமாக்கி விட்டுத்தான் பாண்டி குழுவினர் பேக்கப் ஆனார்கள்.