Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நமீதா ஆட்டம்-கூடியது பெருங்கூட்டம்
லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் படம் பாண்டி. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஸ்னேகா. படத்தில் நமீதாவும் இருக்கிறார். அவருக்காக கிளுகிளு பாட்டை வைத்துள்ளனர்.
இந்தப் பாட்டை பட்டையைக் கிளப்பும் வகையில் செம்பட்டி அருகே படமாக்க தீர்மானித்து அங்கு முகாமிட்டனர்.
கேத்தைய கவுண்டன்பட்டி தோட்டப் பகுதிகளிலும், நடுப்பட்டி என்ற இடத்தில் நடு சாலையிலும் நமீதாவையும் கூடவே லாரன்ஸையும் ஆட விட்டுப் படமாக்கினர்.
இந்தத் தகவல் காட்டுத் தீ போல அக்கம் பக்கத்து கிராமங்களுக்குப் பரவியது. இதையடுத்து கைக்கு கிடைத்த வாகனங்களைப் போட்டுக் கொண்டு மக்கள் நமீதாவை 'தரிசிக்க' பறந்தனர். பள்ளிக்கூட மாணவ, மாணவியர் முதல் பல் போன தாத்தாக்கள், பாட்டிக்கள் வரை பல தரப்பட்ட மக்களும் படையெடுத்து வந்து நமீதாவை பார்த்து பரவசப்பட்டனர்.
படு கிளாமரான உடையில் இருந்த நமீதா, இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும், சற்றே பதறித்தான் போனார்.
இப்படி முக்கியமான சாலையில் பெரும் கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து படப்பிடிப்புக் குழுவினரைக் கண்டித்தனர்.
ஏற்கனவே இப்பகுதிகளில் கோவில் விழாக்களில் ஆபாச ஆட்டம் ஆடக் கூடாது என நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். ஆனால் இப்படி நடுச் சாலையில் ஆபாசமான டான்ஸ் ஆடுவதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கூறி படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் நமீதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கூட்டமும், பிரிய முடியாமல் ஏக்கத்துடன் கலைந்து சென்றது.
இருப்பினும், நிலக்கோட்டை அருகே பேரணை பாலம் என்ற இடத்தில் உரிய போலீஸ் அனுமதியுடன் நமீதா, லாரன்ஸ் பாட்டை பக்காவாக படமாக்கி விட்டுத்தான் பாண்டி குழுவினர் பேக்கப் ஆனார்கள்.