Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'கண் கலங்கிட்டேன்'... பூஜாவை பாராட்டிய ரஜினி
இந்தப் படம் தன்னை ஒரு தமிழ் நடிகனாக பெருமை கொள்ள வைத்திருப்பதாகக் கூறினார் ரஜினி.
தற்போது அப்படத்தில் பார்வை இழந்த பெண்ணாக பிச்சை எடுக்கும் கேரக்டரில் நடித்த பூஜாவையும் வீட்டுக்கு அழைத்து, அவரது நடிப்பைப் பாராட்டி பரிசளித்துள்ளார் ரஜினி.
ரஜினியை சந்தித்த அனுபவம் பற்றி பூஜா நிருபர்களிடம் கூறியதாவது:
நான் கடவுள் படத்தின் மொத்தக் குழுவையுமே ரஜினி சார் வெகுவாகப் பாராட்டினார்.
பாலா சார், ஆர்யா எல்லாம் ரஜினி சாரைப் பார்த்தப்பவே, எனக்கும் ஒரு வாழ்த்து பூங்கொத்து அனுப்பியிருந்தார். ஆனால் அன்று நான் ஊரில் இல்லை. வீட்டுக்கு வந்து பார்த்தால், ரஜினி சார் அனுப்பிய பூங்கொத்து இருந்தது. எனக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. உடனே ரஜினி சாருக்கு போன் செய்தேன்.
என்னுடைய அதிர்ஷ்டம், எந்திரன் படப்பிடிப்பு கேன்ஸலாகி ரஜினி சார் வீட்டிலேயே இருந்தார். உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிட்டது.
சுமார் ஒரு மணிநேரம் ரஜினி சார் குடும்பத்துடன் இருந்தேன். எளிமை, அன்பு, அடுத்தவர்களைப் பாராட்டு ஊக்கப்படுத்துதல் எல்லாவற்றையுமே ரஜினி சார்கிட்டருந்து கத்துக்கணும். அப்பக்கூட அவர் மாதிரி அன்பாக நடந்துக்க முடியுமா தெரியல…
எனக்கு ஒரு ராகவேந்திரர் படமும், ஒரு சால்வையும் பரிசாகக் கொடுத்தார் ரஜினி சார்.
இதைவிட வேற விருதும் பாராட்டும்கூட எனக்குத் தேவையில்ல. என் திரையுலக வாழ்க்கை முழுமை பெற்ற மாதிரி சந்தோஷமாக இருக்கு.
விரைவில் என் குடுபம்த்தோட ரஜினி சாரைப் பார்க்கப் போறேன். இன்னும்கூட, என் பெற்றோரால ரஜினி என்னை நேரில் கூப்பிட்டு வாழ்த்தியதை நம்ப முடியல.
'கண்கலங்கிய ரஜினி…'
படத்தின் இறுதிக் காட்சியில் நான் பேசிய வசனங்களைக் கேட்டு தன்னையும் அறியாமல் கண்கலங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார் ரஜினி சார். அவர் இதைச் சொன்னபோது, எனக்கு கண்கள் கலங்கிவிட்டன, மகிழ்ச்சியில்.
எல்லாப் புகழும் ஆண்டவனுக்கே என்பதுபோல, என்னுடைய இந்த எல்லாப் புகழும் பாலா சாருக்கே சேரும்.
நான் சொந்தக் குரலில் பேசியதை ரொம்ப பாராட்டினார், புதுப் படங்கள் ஒப்புக்கும்போது, கேர்புல்லா இருக்கணும்னு சொல்லியிருக்கார். நிச்சயம் அவர் சொன்னபடி நடப்பேன்…", என்றார் பூஜா நிறைவாக.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!