Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை பூஜாவின் காதலர் போலீசில் சரண்!
நடிகை பூஜா ஒரு துணை நடிகை. சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்த இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது.
திருமணத்துக்கு முன்பே நீலாங்கரையை சேர்ந்த ஜெகன் (26) என்ற ஆட்டோ டிரைவரை தீவிரமாகக் காதிலித்து வந்திருக்கிறார். இந்த உண்மை தெரிந்ததால், கணவர் அவரைப் பிரிந்து சென்றுவிட, தாய் தந்தையுடன் வசித்து வந்த பூஜா, மீண்டும் தனது காதலனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாராம்.
இந் நிலையில் கடந்த வாரம், படப்பிடிப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற பூஜா திரும்ப வீட்டுக்கு வரவில்லை. காதலன் ஜெகனையும் காணவில்லை. எனவே இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார் பூஜாவின் தாய் காமாட்சி.
வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். இந்தத் தகவல் பரபரப்பான செய்தியாகப் பரவவே, ஜெகன் மட்டும் போலீசில் சரணடைந்தார்.
போலீசாரிடம் அவர், "எனக்கு திருமணம் ஆகி விட்டது. நான் வீட்டில் இருந்தபோது, பூஜா வந்து, தன்னுடன் ஒரு இடத்துக்கு வருமாறு அழைத்தார். என்னை புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றார்.
அங்கு நண்பரின் உறவினர் வீட்டில்தான் தங்கி இருந்தோம். போலீசார் தேடுவதை அறிந்து நான் மட்டும் இங்கு வந்துவிட்டேன், என்றார் ஜெகன். பூஜா தங்கியிருக்கும் விலாசத்தையும் போலீசாரிடம் கொடுத்தார்.
இப்போது பூஜாவை அழைத்து வர போலீசார் புதுக்கோட்டைக்கு விரைந்துள்ளனர்.