Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ?
பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பவுலர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடந்த இரவு நேர விருந்தில் ப்ரீத்தியும் பிரட் லீயும் பிரட்டும் ஜாமும் போல ஒட்டி உறவாடினார்களாம்.
இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து மனம் வெதும்பித்தான் யுவராஜ் சிங் அணியை விட்டே வெளியேறுவேன் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது (யுவராஜ் சிங் இப்போது அதை மறுத்துள்ளார்).
இருவரும் டேட்டிங் போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரட் லீயின் மேனேஜர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் அணியினர் இப்படிக் கூறுகின்றனர்:
"ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் அணி வீரர்கள் மீது தனி பிரியம். அதனால்தான் அவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். நட்புடன் அணைத்துக் கொண்டார்.
முன்பு யுவராஜ் சிங்கை அவர் கட்டிப் பிடித்ததை இப்படித்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். அணியின் நன்மைக்காகவே ப்ரீத்தி இந்த அளவு சுதந்திரமாக அனைவருடனும் பழகி வருகிறார். அதைப் போய் தவறாகப் பேசுவதா?" என்றனர்.