Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மிருதுளா போய் தென்றல்!
ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷின் மகன் தமிழ். இவர் இப்போது நடிகராகி விட்டார். அதிலும் ஹீரோவாகி விட்டார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம்தான் ஐம்புலன்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தவர் மிருதுளா. கேரள தேசத்தின் தேஜஸான நாயகி. படு க்யூட்டாக இருக்கும் மிருதுளா இப்போது செம டல்லாகியுள்ளார். காரணம், ஐம்புலன் படத்தில் அவர் இல்லை.
என்னாச்சு என்று மிருதுளாவிடம் கேட்டபோது ஏமாத்திட்டாங்க சார் என்று புலம்பித் தள்ளி விட்டார். அமர வைத்து ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி நடந்ததைக் கேட்டபோது மிருதுளா கொட்டியதாவது;
ஒரு வருடத்திற்கு முன்பே இந்தப் படத்தைத் தொடங்கி விட்டனர். மூன்று மாதம் இப்படத்துக்காக கால்ஷீட் கொடுத்திருந்தேன். 15 நாள் ஷூட்டிங் நடந்தது. ஒரு சாதாரண ஹோட்டலில்தான் என்னை தங்கவைத்தனர். நானும் அதை பெரிதுபடுத்தவில்லை. சாப்பாடும் சரியில்லை. அதையும் பொறுத்துக் கொண்டேன்.
ஆனால் 15 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு நடைபெறவில்லை. கேட்டதற்கு சரியான பதிலும் இல்லை. இப்படியே மூன்று மாதங்கள் ஆகி விட்டது. எனது கால்ஷீட்டும் முடிந்து விட்டது. இதனால் நான் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
இந்த நிலையில் திடீரென போன் செய்து ஈரோட்டில் ஷூட்டிங் வைத்திருக்கிறோம், தவறாமல் வந்து விடுங்கள் என்றார்கள். சரி என்று நானும், எனது தாயாரும் கைக்காசை செலவழித்து ஈரோட்டுக்குப் போனோம்.
ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் யாருமே இல்லை. எதற்காக எங்களை ஈரோட்டுக்கு வர வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஆனால் நான் சம்பளம் அதிகம் கேட்டதாகவும், இதனால் படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார் இயக்குநர் சந்திரா குரு என்கிறார் மிருதுளா.
இப்போது மிருதுளா இடத்தில் தென்றல் என்ற புதுமுகம் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு