சினிமாவுக்கு குட்பை சொன்ன "தூத்துக்குடி" நாயகி கார்த்திகா

தூத்துக்குடி படத்தில் பாவாடை, தாவணியில் அழகாய் வலம் வந்தவர் கார்த்திகா. அந்த படத்தில் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு அத்தனை பிரபலம். அதைத்தொடர்ந்து நாளைய பொழுதும் உன்னோடு, மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
கொஞ்ச நாளாக கார்த்திகாவை ஆளையே காணோமே என்று நினைத்து தேடிய போது தான் அவர் சினிமாவுக்குக் குட்பை சொல்லிய தகவல் கிடைத்தது. அம்மணி சினிமாவே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம். சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்ட அவர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டாராம். சினிமா சம்பந்தப்பட்ட யாருடனும் அவருக்கு பேச விருப்பமில்லையாம்.
ஏன் இந்த திடீர் முடிவு? அப்படி என்ன கசப்பான அனுபவத்தை சந்தித்தார் கார்த்திகா??
Comments


Click it and Unblock the Notifications