twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனது கண்களை தானம் செய்த சினேகா!!

    By Shankar
    |

    பிரபல நடிகை சினேகா தனது கண்களை இன்று தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு ராஜன் ஐ கேர் மருத்துவமனைக்கு அவர் வழங்கினார்.

    தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என அழைக்கப்படும் நடிகை சினேகா பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

    சமீபத்தில் கூட போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தது நினைவிருக்கலாம்.

    இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான விழா இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது.

    கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, "கண்தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையை தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது" என்றார்.

    English summary
    Leading actress Sneha, popularly known as the smile queen of south cinema, donated her eyes today. In an simple event organised by Rajan Eye Care Hospital, the actress signed the eye donation document and handed over to the concerned persons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X