Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆள் மாறாட்ட வழக்கு புளோராவுக்கு ஜாமீன் மறுப்பு
குஸ்தி, கஜேந்திரா, ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள புளோராவும், ஸ்ரீலதா என்ற பெண்ணும் அமெரிக்க தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
ஸ்ரீலதாவை தனது மேக்கப் உதவியாளர் என்று கூறி விசா கேட்டிருந்தார் புளோரா. விசாரணையில் அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிய வந்தது. மேலும் தாக்கல் செய்த ஆவணங்களும் பொய்யானவை என்று தெரிய வந்தன. இதையடுத்து அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர் தூதரக அதிகாரிகள்.
இதையடுத்து போலீஸார் இவர்கள் இருவரையும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் வெங்கட் ரெட்டி என்பவரையும் கைது செய்தனர்.
கைதான புளோரா சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து புளோராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சந்தோஷமாக இருக்கிறார் புளோரா
இதற்கிடையே சிறைக்குச் சென்ற புதிதில் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த புளோரா இப்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.
தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள பெண்களுடன் கேஷுவலாக பேசுகிறாராம். கொடுக்கிற சாப்பாட்டை வாங்கி சாப்பிடுகிறாராம். ஆரம்பத்தில் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இப்போது சாப்பாடு பழகி விட்டதாம்.
சப்பாத்தியைத்தான் அதிகம் கேட்டு வாங்கி சாப்பிடுகிறாராம். அத்தோடு சமையல் கட்டுக்குச் சென்று அங்குள்ள சமையல் பெண்களிடம் சகஜமாக பேசுகிறாராம். அவரும் சில நேரங்களில் சமையல் செய்கிறாராம்.
புளோராவிடம் நடிப்புலக அனுபவங்கள் குறித்து சக கைதிகள் ஆவலோடு கேட்கிறார்களாம். ஆனால் புளோராவுக்கு தமிழ் தெரியாததால் தனக்குத் தெரிந்த அளவுக்கு அவர்களிடம் பேசுகிறாராம் புளோரா.
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி