கணவர் இயக்க மீண்டும் நடிக்க வருகிறார் மந்த்ரா

ப்ரியம் படம் மூலம் நடிக்க வந்த மந்த்ரா, குறுகிய காலத்திற்குள் அஜீத் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார். மூத்த நடிகரான சத்யராஜுடனும் ஜோடி சேர்ந்தார்.
தாராளமான கவர்ச்சியுடன் கலக்கலாக நடித்து வந்த மந்த்ரா, எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹீரோயினாக முடியவில்லை. இதனால் தான் காதலித்து வந்த இயக்குநர் நிவாஸைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அதன் பிறகு வெளியுலகில் அவரைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லத்தரசியாக இருந்து வரும் மந்த்ராவுக்கு மீண்டும் நடிப்பு ஆசை முளை விட்டுள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குறுகிய காலமே நடித்திருந்தாலும் நான் 75 படங்களை முடித்து விட்டேன். இது ஒரு சாதனைதான்.
இப்போது என்னைப் பார்ப்பவர்கள் மீண்டும் நடிக்கலாமே என்று கேட்கிறார்கள். எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது.
எனது கணவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதில் நான் நடிக்கிறேன். ஹீரோயினாக அல்ல, முக்கிய கேரக்டரில் நடித்து ரீ என்ட்ரி ஆகிறேன். தொடர்ந்து நடிப்பது குறித்து அதன் பின்னர் முடிவு செய்யவுள்ளேன் என்கிறார் மந்த்ரா.


Click it and Unblock the Notifications











