கள்ளுக்கடையில் நயனதாரா ரகளை!

By Staff

Nayanthara
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை நயனதாரா, தனது உத்தரவையும் மீறி தன்னை வளைத்து வளைத்துப் படம் பிடித்த கள்ளுக்கடை உரிமையாளரின் கேமராவை வாங்கி கீழே போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டயம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நயனதாரா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோட்டயம் வந்த நயனதாரா அங்குள்ள ஹோட்டலில் தங்கினார்.

பின்னர் காலை உணவுக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு அவர் போனார். அப்போது நயனதாராவைப் பார்த்ததும் ஏராளமான பேர் அங்கு கூடி விட்டனர்.

அப்போது ஒருவர் (கள்ளுக்கடை நிர்வாகியாகம்) நயனதாராவை அருகில் பார்த்த உற்சாகத்தில், தனது கேமராவால் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த நயனதாரா, போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த கள்ளுக்கடை உரிமையாளரோ, வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தார்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த நயனதாரா, அவரிடம் சென்று கேமராவைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்தார். மேலும் நயனதாராவுடன் வந்திருந்த பாதுகாவலர்களும் அவரை அடிக்கப் பாய்ந்தனர்.

இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் குறுக்கே பாய்ந்து அனைவரையும் விலக்கி விட்டனர். பின்னர் நயனதாரா பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். இருப்பினும் நயனதாரா புகார் ஏதும் கொடுக்காததால், கள்ளுக்கடை உரிமையாளர் கைது செய்யப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X