Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கள்ளுக்கடையில் நயனதாரா ரகளை!
கோட்டயம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நயனதாரா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோட்டயம் வந்த நயனதாரா அங்குள்ள ஹோட்டலில் தங்கினார்.
பின்னர் காலை உணவுக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு அவர் போனார். அப்போது நயனதாராவைப் பார்த்ததும் ஏராளமான பேர் அங்கு கூடி விட்டனர்.
அப்போது ஒருவர் (கள்ளுக்கடை நிர்வாகியாகம்) நயனதாராவை அருகில் பார்த்த உற்சாகத்தில், தனது கேமராவால் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த நயனதாரா, போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த கள்ளுக்கடை உரிமையாளரோ, வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தார்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த நயனதாரா, அவரிடம் சென்று கேமராவைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்தார். மேலும் நயனதாராவுடன் வந்திருந்த பாதுகாவலர்களும் அவரை அடிக்கப் பாய்ந்தனர்.
இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் குறுக்கே பாய்ந்து அனைவரையும் விலக்கி விட்டனர். பின்னர் நயனதாரா பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். இருப்பினும் நயனதாரா புகார் ஏதும் கொடுக்காததால், கள்ளுக்கடை உரிமையாளர் கைது செய்யப்படவில்லை.