Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை காவேரி-வைத்தி சமரசம் இல்லை!
நடிகை காவேரிக்கும், ஒளிப்பதிவாளர் வைத்திக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டு முகப்பேரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பம் நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வைத்திக்கும், அவரது மாமன் மகளுக்கும் கல்யாணம் முடிவானது. இதை அறிந்த காவேரி போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் வைத்தி தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், இருவரையும் சமரச தீர்வு மையத்தை அணுகுமாறு உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சமரச தீர்வு மையத்தின் ஆலோசனைக்கு உட்பட்டனர். பல சுற்றுப் பேச்சுவார்த்ைதக்குப் பிறகும் இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இந்த விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே அனுப்புவதாக சமரச மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வைத்தியின் முன்ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் அல்லது அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு மீண்டும் ஆஜர்:
இதற்கிடையே, நடிகர் பிரசாந்த் தனது மனைவிக்கும், தனக்கும் நடந்த திருமணம் செல்லாது, அவரிடம் உள்ள குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பிரசாந்த் சார்பில் அவரது வக்கீல் ஆனந்தன் ஆஜரானார். பிரசாந்த்தும் வந்திருந்தார். அதேபோல, கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரது முதல் கணவர் வேணு பிரசாத் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஆஜராவதற்காக பிரசாத், கிரகலட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்த வழக்குகள் தொடரப்பட்ட பின்னர் 3 பேரும் சேர்ந்து கோர்ட்டுக்கு வந்தது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?