விந்தியா விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு

சங்கமம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விந்தியா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபியை அவர் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
திருமணமான சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விந்தியா சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். கோபி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கோபி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கோபி, விந்தியா இருவரும் கோர்ட்டில் வந்து ஆஜரானார்கள்.
குடும்பநல கோர்ட்டில் உள்ள ஆலோசனை மையத்தில் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











