Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விந்தியா விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு
சங்கமம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விந்தியா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபியை அவர் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
திருமணமான சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விந்தியா சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். கோபி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கோபி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கோபி, விந்தியா இருவரும் கோர்ட்டில் வந்து ஆஜரானார்கள்.
குடும்பநல கோர்ட்டில் உள்ள ஆலோசனை மையத்தில் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.