Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
விந்தியா விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு
சங்கமம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விந்தியா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபியை அவர் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
திருமணமான சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விந்தியா சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். கோபி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கோபி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கோபி, விந்தியா இருவரும் கோர்ட்டில் வந்து ஆஜரானார்கள்.
குடும்பநல கோர்ட்டில் உள்ள ஆலோசனை மையத்தில் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.