Don't Miss!
- News எல்லா தப்பையும் நீங்க தான் பண்ணீங்க..கக்கூஸ் கூட போக முடியல! திணறும் ரயில் பயணிகள்..தீர்வுதான் என்ன?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விந்தியா விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு
சங்கமம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை விந்தியா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபியை அவர் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.
திருமணமான சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விந்தியா சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். கோபி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கோபி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கோபி, விந்தியா இருவரும் கோர்ட்டில் வந்து ஆஜரானார்கள்.
குடும்பநல கோர்ட்டில் உள்ள ஆலோசனை மையத்தில் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.