Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என் படத்தைப் பார்க்க எனக்கே வெட்கமா இருக்கு-ஹன்சிகா
மும்பையிலிருந்து வந்த புது வரவுகளில் ஹன்சிகாவும் ஒருவர். இதுவரை இவரால் ஒரு படம் ஓடியது என்று கூற முடியாத அளவுக்கு இவரது 'ராசி சிறப்பாக' உள்ளது. இருந்தும் இவரைத் தேடி நிறையப் படங்கள் வந்தவண்ணம் உள்ளதுதான் அனைவருக்கும் பெரிய ஆச்சரியம். இப்போது வேலாயுதம் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு நாளிதழுக்கு மனம் விட்டு கருத்துகளை தெரிவித்துள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது...
எனது குடும்பத்தில் எப்போதுமே என்னை நடிகையாக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. எனது தாயார் ஒரு சருமவியல் மருத்துவர். நான் பள்ளியில் படித்தபோது பள்ளிக்கூடம் முடிந்ததும், அவரது கிளினிக்குக்குப் போய் விடுவேன். அங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் சரும நோய்கள் தொடர்பாக எனது தாயாரைப் பார்க்க வருவர். அப்போது என்னைப் பார்க்கும் பலரும், இவள் அழகாக இருக்கிறாள், விளம்பரங்களில் நடிக்க வையுங்கள், சினிமாவில் சேர்ந்தால் பெரிய ஆளாக வருவாள் என்றனர். ஆனால் எனது தாயாரோ அதை உடனே மறுத்து விடுவார்.
இருப்பினும் பின்னர் நானும் குழந்தை நட்சத்திரமாகி விட்டேன்.அதற்கு காரணம் அருணா இரானிதான். பிறகு அப்படியே இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். அப்படியே தமிழுக்கும் வந்தேன்.
தமிழில் எனக்கு தனுஷுடன்தான் முதல் படம். அப்போது அவர்தான் எனக்கு நிறைய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார். பினனர் ஜெயம் ரவியுடன் நடித்தபோது அவர் என்னை தமிழில் கலாய்ப்பார். அதற்கு நான் எனக்குத் தெரிந்த தமிழில் பதிலளித்து மேலும் காமெடியாக்குவேன்.
நிறையப் படங்களில் நடித்து விட்டேன். ஆனால் எனது படங்களை நான் பார்க்கும்போது எனக்கே வெட்கமாக, அவமானமாக உள்ளது. இதை விட சிறப்பாக நடித்திருக்கலாமோ என்று தோன்றும். இதனால் ஒவ்வொரு படத்திலும் மேலும் மேலும் சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன் என்றார் ஹன்சிகா.
ஹன்சிகா தனது தாயார் மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். எனக்காக தனது தொழில், தூக்கம், கனவுகள் என எல்லாவற்றையும் விட்டு விட்டார் அவர். அவர் தான் எனது முழு பலமும் என்கிறார் ஹன்சிகா.