Don't Miss!
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
'அந்த' கேரக்டரில் நவ்னீத் கெளர்!
விஜயகாந்த்தின் 150வது படம் அரசாங்கம். அதில் அவருக்கு இரட்டை ஜோடிகள். ஒருவர் கலக்கலான ஷெரில் பின்டோ, இன்னொருவர் அமர்க்களமான நவ்னீத்கெளர்.
இதில் ஷெரிலுக்கு விஜயகாந்த்துடன் ஜோடி சேர இன்னொரு வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. எங்கள் ஆசான் படத்தில் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்து வருகிறார் ஷெரில்.
இந்த நிலையில் நவ்னீத்கெளருக்கு இன்னொரு தமிழ்ப் படம் கிடைத்துள்ளது. இந்தியில் வெளியான சமேலி படத்தின் தமிழ் ரீமேக்கில் நவ்னீத்கெளர் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் நாயகி விபச்சார பெண். அந்த வேடத்தில்தான் நவ்னீத் கெளர் நடிக்கவுள்ளார். சவாலான இந்த கேரக்டரில் நடிக்க பலரும் தயங்கிய நிலையில் நான் நடிக்கிறேன் என துணிந்து நடிக்க முன் வந்துள்ளாராம் நவ்னீத் கெளர்.
இந்தியில் இந்த வேடத்தில் நடித்தவர் கரீனா கபூர். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறப்பான முறையில் நடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நவ்னீத் கெளர்.